முதல் அறிமுகத்திற்கு பின் நம் நட்பு தொடர்ந்தது எப்படி??
ஒரே வகுப்பில் படித்தாலாவது அவ்வப்போது ஒரு 'ஹாய்' சொல்லிக்கொள்ள முடியும்,
நாம இரண்டு பேரும் வெவ்வேறு க்ளாஸ்......பின் எப்படி??
ஒரே டிபார்ட்மெண்டிலாவது படித்தோமே.........அதுதான் நம் நட்பு தொடர காரணம்.
உனக்கு சீனியர் என்ற பயமெல்லாம் என்னிடம் முதலிலேயே இருந்ததில்லை, இருந்தும் ஒரு பயந்துபோன முகபாவத்தை வைத்துக்கொள்கிறாய் என ரொம்ப லேட்டாகதான் புரிந்தது.
என் நண்பன் உனக்கு தூரத்து உறவாகபோனது தான் நம் நட்பு மேலும் பலப்பட வழிவகுத்தது.
அவன் உறவு முறையில் உனக்கு அண்ணனாக போனது எனக்குள்ளாக ஒரு ஆறுதல் தெரியுமா??
அதுக்கு அர்த்தம் எல்லாம் எனக்கு அப்போவும் தெரில, இப்போவும் சொல்ல தெரில.
சொந்தக்காரன் அவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பேசுகிறாயோ, அதே அளவு இம்பார்டென்ஸ் எனக்கும் நீ தர வேண்டும் என என் மனம் அடிக்கடி சண்டையிடும் எனக்குள்ளாக.
ஆனால் வெளிக்காட்டிக்கவில்லை!!
நமக்கு பிடித்த பெண், நம்மை 'அண்ணா' ன்னு கூப்பிட்டா எப்படி இருக்கும்னு எப்போ உணர்ந்தேன் தெரியுமா??
நீ என் நண்பன் .......அதான் உன் சொந்தக்கார அண்ணனை எங்கே என என்னிடம் கேட்பதற்காக என்னிடம்
"அருண் அண்ணா எங்கே??" என நடுவில் கமா.......ஃபுல் ஸ்டாப் எதுவும் இல்லாமல் கேட்டுவிட, ஒரு நிமிஷம் பதறிபோய்ட்டேன்.
என்னையும் அண்ணன்னு கூப்பிட்டிட்டியே ன்னு மனசு கிடந்து அடிச்சிகிச்சு:(
அப்புறமாதான் நீ என்கிட்ட உன் அண்ணா எங்கேன்னு கேட்குறேன்னு புரிஞ்சு நிம்மதி பெருமூச்சு வந்தது.
இப்படி.........இப்படி தான், உன்மேல கொஞ்சம் கொஞ்சமா நட்பும் நேசமும் எனக்குள்ள உருவாகியது.
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment