மனதில் உள்ளதை சொல்ல தைரியமில்லாமல் கோழையை போல் எழுத்தில் வெளிப்படுத்துகிறேன் என என்னை நீ தவறாக நினைத்தாலும் ப்ரவாயில்லை.
என் மன அழுத்தத்திற்கு இது ஒரு வெளியோட்டமாகவாவது இருந்துவிட்டு போகட்டும்.
உன்னிடமிருந்து கற்றுக்கொண்ட வலைதளமே, எனக்கு தற்போது இருக்கும் ஒரே ஒரு தூது.......உன்னிடம் மனம் திறக்க.
என் மனதின் ஆசைகளை ஒருவேளை நீ ஏற்றுக்கொள்ளாவிட்டால்??
.........என்னைவிட்டு நீ விலகி சென்றுவிட்டால்??
நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை:(
எத்தனை வருடங்கள் கழித்து உன்னை சந்தித்திருக்கிறேன், மீண்டும் உன்னை தொலைத்திட தெம்பில்லையடி கண்ணம்மா.
எனக்கு உன் அருகாமை போதும்.
இப்போது நீ என் மேல் காட்டும் பரிவும், அன்பும் போதும்.
இதற்கு மேலும் எனக்கு எதிர்பார்பும் ஆசையும் உருவாகிறது உன் மேல் என நீ உணர்ந்துக்கொண்டிருந்தால் , என்னிடம் நிச்சயம் ஏதோ ஒரு வகையில் கேட்டிருப்பாய்.
உணராததினால்தானே..........கள்ளம் இல்லா அதே நட்புடன் என்னோடு பழகுகிறாய்,
அந்த நட்பும் அன்பும் போதுமடி எனக்கு.
என்று நீயாக என்னை , என் காதலை உணருவாயோ .....அதுவரை காத்திருப்பேன்.
ஏன் இந்த முட்டாள் தனமென்று எண்ணுகிறாயோ??
'ஏன்' என்ற கேள்விகளுக்கும் பல நேரம் நமக்கு விடைகிடைப்பதில்லை அடி என் கண்ணே!!!
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment