நாம் முதல் முதலில் எப்போது சந்தித்திக்கொண்டோம் என நினைவிருக்கிறதா??
இரவு முழுவதும் விழித்திருந்து படித்தாலும், பரீட்சை ஹாலுக்கு போவதற்கு முன்னமே மறந்து போகும் எனக்கு, நாம் முதன் முதலில் சந்தித்தது மட்டும் பசுமையாக நினைவிருக்கிறது.
என் நண்பனிடம் நீ கேட்டிருந்த எங்களது முந்தைய செமஸ்டர் ரிகார்ட் நோட்புக், அவனிடம் இல்லாததினால், என்னிடம் வாங்கிக்கொள்ள அவன் உன்னிடம் சொல்லிவிட,
தயங்கி தயங்கி......என்னிடம் நீ வந்து கேட்டது,
வேண்டுமென்றே நீ யார்? எந்த செமஸ்டர்? எந்த டிபார்ட்மெண்ட்? எந்த ஊரு?? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு உன்னை கடுப்பாக்கி, பின் ரிகார்ட் புக்கை மறுநாள் தருவதாக கூறி விட்டு,
ரிகார்ட் நோட் வேணும்னா......என்கூட ஒரு கப் காஃபி கேண்டின் யில் குடிக்க நீ வர வேண்டும் என சொன்னதும்,
"ஹலோ உங்க காஃபியும் வேணாம், உங்க ரிகார்ட் நோட்டும் வேணாம்' என்று முகம் சுழித்து காட்டி விட்டு, விறு விறு வென வேகமா காரிடரில் நீ செல்ல..........ஸாரி, ஸாரி என்று கத்திக்கொண்டே நான் உன் பின்னால் ஓடி வர.........அன்று ஆரம்பித்தது நம் அறிமுகம்.
அந்த மைக்ரோ ப்ரோசசர் லேப் காரிடர் இன்னும் அப்படியே கண் முன் வந்து செல்கிறது.
நீ அணிந்திருந்த ஃப்ளு கலர் சுடிதார், தலையில் போட்டிருந்த போனி டெயில்........கையில் வைத்திருந்த குடை:)))[நீ வைத்திருக்கும் குடைக்கென்று ஒரு தனி பதிப்பெழுதுவேன் பார்!!]
கண்களை உருட்டி பேசும் உன் அபிநயங்கள்........இப்படி சொல்லிட்டே போகலாம்.
ஒரே பதிப்பில் எல்லாவற்றையும் சொல்லிட முடியுமா??
வெயிட்.........அடுத்த பதிவில் சொல்றேன்!!!
Subscribe to:
Post Comments (Atom)

0 comments:
Post a Comment